×

தனியார் ஊழியர் மர்ம சாவு: போலீசார் விசாரணை

ஆவடி: ஆவடி அசோக் நிரஞ்சன் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் முத்து(47).  தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லட்சுமி(40).  தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம்  இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.  வீட்டில் மகன், மகள் ஆகியோர் இருந்துள்ளனர். பின்னர்,  பிற்பகல் 3 மணி அளவில் வேலை முடிந்து, முத்து வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், அவர் மகன், மகள் ஆகியோரிடம் எதுவும் பேசாமல் படுக்கையறைக்கு சென்று தூங்கி  உள்ளார்.  இரவு லட்சுமி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது, முத்து, வீட்டில் இறந்து கிடந்தார். மேலும், அவரது கழுத்தின் முன்பக்கமும், பின்பக்கமும் காயங்கள் இருந்தததை கண்டு லட்சுமி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து லட்சுமி  ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Tags : death ,Police investigation ,
× RELATED அதிர்ஷ்டசாலியாக தேர்வானதாக இ-மெயில்...