×

காட்டு யானை துரத்தியதால் உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்தவர் தவறி விழுந்து காயம்

பந்தலூர்,டிச.23: பந்தலூர் அருகே பாக்கனா பகுதியில் வசித்து வருபவர் முகமது சுலைமான் (23). இவர் நேற்று முன்தினம் இரவு பாடந்தொரை பகுதிக்கு சென்று திரும்பி வரும்போது பாக்கனா அருகே காட்டு யானையை பார்த்து பைக்கை நிறுத்திவிட்டு யானையிடம் இருந்து உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்தார். அப்போது தவறி கீழே விழுந்ததில் காயமடைந்தார். யானையிடம் இருந்து உயிர் தப்பியவர் கேரளா மாநிலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆக்ரோசம் அடைந்த  யானை பைக்கை  கீழே தள்ளி சேதப்படுத்தியது.

சம்பவம் குறித்து பிதர்காடு வனச்சரகர் மனோகரன் கூறுகையில், பொதுமக்கள் மத்தியில் யானை நடமாட்டம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இரவு நேரங்களில் யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் பைக்கில் சென்று வருகின்றனர். அதனால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. பொதுமக்கள் வனத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து, யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் நடமாடுவதை தவிர்க்கவேண்டும் என்றார்.

Tags : survivor ,
× RELATED கொரோனாவை வென்ற 97 வயது முதியவர் :...