×

பெண் போலீஸ் விட்டுச்சென்றதுப்பாக்கி தோட்டாக்கள்

கோவை, டிச.23: கோவை மத்திய சிறை நுழைவு வாயிலில் இருந்து சிறிது தூரத்தில் வ.உ.சி. பூங்கா ரோட்டில் நேற்று முன்தினம் 5 துப்பாக்கி தோட்டா கிடந்தன. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள், ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கே சென்று தோட்டாக்களை கைப்பற்றி விசாரித்தனர். தோட்டாக்கள் 410 மஸ்கட் ரகத்தை சேர்ந்தது எனவும், போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கிகளில் இந்த ரக தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரியவந்தது.

போலீசார் விசாரணையில் சிறைக்கு கைதிகளை அழைத்து செல்ல வந்து செல்லும் போலீசார் வாகனங்களில் சென்றபோது துப்பாக்கி ேதாட்டாக்களை விட்டு சென்றிருக்கலாம் என தெரியவந்தது. சிறைக்கு வந்து சென்ற போலீசார் பட்டியலை பெற்று விசாரித்தபோது ஈரோடு கோபிச்செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த போலீசார் கோவை சிறைக்கு கைதிகளை அழைத்து கொண்டு வந்த தகவல் வெளியானது. கோபி போலீசாரிடம் தோட்டாக்கள் தொடர்பாக போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த தோட்டாக்கள் பெண் போலீஸ் ஒருவர் விட்டுச்சென்ற தோட்டாக்கள் என தெரியவந்தது.

அவர் கைதி ஒருவரை சிறையில் இருந்து கோர்ட்டில் அழைத்து சென்ற ஆஜர்படுத்தியுள்ளார். அவர் பஸ்சில் வந்து சென்றபோது வேகத்தடை அருகே தோட்டாக்கள் பேக்கில் இருந்து தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது. விசாரணைக்கு பின்னர் இந்த தோட்டாக்கள் உரிய போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது. பணியின்போது அஜாக்கிரதையாக செயல்பட்டதாக பெண் போலீசில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு