ஈரோடு, டிச. 23: ஈரோடு தெப்பக்குளம் வீதியில் பிறந்த கணித மேதை ராமானுஜத்தின் 133வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தெப்பக்குளத்தில் உள்ள ராமானுஜத்தின் சிலைக்கு வரிசெலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், அச்சங்க செயலாளர் பாரதி, ராதாமணி, சத்தியமூர்த்தி, சங்க பொருளாளர் சந்திரசேகர், செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், பா.ஜ. சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி தலைமையில் அரசு தொடர்பு துறை தலைவர் சக்தி சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் சவடமுத்து முன்னிலையில், மண்டல தலைவர் மெய்யானந்தம், பொதுச்செயலாளர் பிரகாஷ், மகளிர் அணி புனிதம் உள்ளிட்டோர் ராமானுஜம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் சார்பில், மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி. ரவி, தி.மு.க. சார்பில் கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.