×

மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்ைக கோரி கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கிய பெண்


கரூர், டிச. 23: மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராயனூரைச் சேர்ந்த பெண் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் ராயனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரா(45). இவர், நேற்று காலை 12மணியளவில் கையில் பேனருடன், கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து திடிரென உண்ணாவிரத போராட்டம் நடத்த ஆரம்பித்தார். இது குறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் விரைந்து வந்து, அந்த பெண்ணுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதோடு, தாந்தோணிமலை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த பெண்ணின் மகன் நாகராஜ் என்பவரை சில நாட்களுக்கு முன்பு ராயனூர் பகுதியில் சிலர் தாக்கியுள்ளனர் எனவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இதனை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : death ,hunger strike ,Karur Collector ,attackers ,office premises ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...