×

வாக்குப்பதிவு இயந்திரம் முதல்கட்ட பரிசோதனை அதிகாரிகள்- அதிமுகவினர் இடையே வாக்குவாதம்

கரூர், டிச. 23: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதற்கட்ட பரிசோதனை முகாம் நடைபெறும் வளாகத்தில் அதிகாரிகளுக்கும், அதிமுகவினர் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் நேரில் விசாரணை மேற்கொண்டார். கரூரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான மண்டபத்தில் கடந்த சில நாட்களாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதற்கட்டமாக பரிசோதனை நடத்தப்படும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த பகுதிக்கு குறிப்பிட்ட சிலரை தவிர யாரும் செல்லக்கூடாது எனவும், செல்போன் போன்றவை எடுத்துக் செல்லக் கூடாது எனவும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மதியம், பெங்களூரில் வந்திருந்த அதிகாரிகள் குழுவினர், உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அவ்வாறு சென்ற குழுவில், ஒரு சிலர் செல்போன் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால், அதிகாரிகளுக்கும், அதிமுகவினர் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு கலெக்டர் மலர்விழி சென்று விசாரணை மேற்கொண்டு சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : superintendents ,test officers ,
× RELATED புத்தாண்டு பாதுகாப்பில் ஆயிரம் போலீசார்: மாவட்ட எஸ்பி தகவல்