×

வேலூர் கோட்டை அகழியில் வாலிபர் சடலம் மீட்பு போலீஸ் விசாரணை

வேலூர், டிச.22 வேலூர் கோட்டை அகழியில் நேற்று காலை வாலிபர் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் கொணவட்டம் தியாகி தாமோதரன் தெருவை சேர்ந்தவர் நக்கீரன், ஓய்வு பெற்ற சிறை ஊழியர். இவரது மகன் கண்ணன் (28). இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கண்ணனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் வேலூர் புதிய மீன் மார்க்கெட் எதிரே உள்ள கோட்டை அகழியில் வாலிபர் சடலம் மிதப்பதாக அந்தபகுதி மக்கள் வேலூர் வடக்கு போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சடலமாக இருப்பவர் கொணவட்டத்தை சேர்ந்த மாயமான கண்ணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : recovery ,fort moat ,Vellore ,
× RELATED வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய...