×

காட்பாடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

வேலூர், டிச.22: காட்பாடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். காட்பாடி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு மின்வாரிய பகிர்மான அனைத்து சங்கங்களின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு சிஐடியு மாநில செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். சம்மேளன மாநில இணைச்செயலாளர் சுப்பிரமணி, ஐக்கிய பேரவை பொருளாளர் சுந்தர்ராஜி, டென்ஜெட்கோ திட்டசெயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், மின்வாரியத்தலைவர் தன்னிச்சையாக பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யவேண்டும், மின்வாரியத்தை தனியார் மயமாக்கலை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 150க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Power plant workers ,Katpadi ,
× RELATED காட்பாடியில் அகற்றிய சில மாதங்களில்...