×

கண்களில் கருப்பு துணி கட்டி வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச.22: காங்கயம் வட்டம் கொடுவாய் நிழலி கிராமத்தில் கடந்த 2014ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டாவை  முறையாக அளந்து தர வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : protesters ,VCK ,
× RELATED மோடியை விரட்டினால் தான் நமக்கு...