×

கொள்ளையர்கள் சிக்கினர்

பொன்னேரி:  மீஞ்சூர் பகுதியில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடத்த கொள்ளையர்கள் திட்டம் தீட்டி வருப்பதாக மாவட்ட எஸ்பி அரவிந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மதியரசன், எஸ்ஐ மாரிமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படையினர் நேற்று முன்தினம் மீஞ்சூர் பகுதியில் மாறுவேடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அத்திப்பட்டு புதுநகர் மேம்பாலம் கீழ் பதுங்கியிருந்த 5  பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து மீஞ்சூர் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் எண்ணூரை சேர்ந்த பெரியதுரை(19), மெதூர் கிராமத்தை சேர்ந்த சின்னராசு(26), ராஜன்(24), மகாலிங்கம்(19), முத்துராசு(20) ஆகிய 5 பேரும் கோயில்கள் மற்றும் வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : robbers ,
× RELATED பட்டாக்கத்தியுடன் திரிந்த 2 ரவுடிகள் கைது