×

கடையடைப்பு வாபஸ்

ஊத்துக்கோட்டை: பிச்சாட்டூர் ஏரி நிரம்பியதால் கடந்த மாதம் ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் தற்காலிகமாக தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால், ஊத்துக்கோட்டை - திருவள்ளூர்  இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு ஊத்துக்கோட்டையில் வியாபாரம் சரிவர இல்லாமல் வியாபாரிகள் அவதிப்பட்டனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட திருவள்ளூர் கலெக்டரிடம் தற்காலிக தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால், அதிகாரிகளை கண்டித்து இன்று (22ம் தேதி) கடை அடைப்பு செய்வது என தீர்மானித்தனர். இதையறிந்த அதிகாரிகள் வணிகர் சங்க நிர்வாகிகளிடம் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதனை ஏற்று இன்று நடக்க இருந்த கடையடைப்பு வாபஸ் பெறப்பட்டது.

Tags : Shoplifting withdrawal ,
× RELATED கடையடைப்பு வாபஸ்