×

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கூடலூர், டிச. 22: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, கூடலூரில் காங்கிரஸ் சார்பில் ஏர்கலப்பை பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில், கூடலூர் பழைய பஸ்நிலையம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டமும், ஏர்கலப்பை பேரணியும் நடைபெற்றது. தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கூடலூர் முருகேசன் தலைமை வகித்தார். கோபால், சாகுல் அமீது, சந்திரன், தங்கம் முன்னிலை வகித்தனர். கூடலூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பேச்சாளர் கவிஞர் பாரதன், மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியம், மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி, வழக்கறிஞர் கருப்புசாமி கண்டன உரை நிகழ்த்தினார். கூட்டத்தில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட, நகர, வட்டார பொறுப்பாளர்களும் கூடலூர் நகர, வார்டு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூடலூர் நகர பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.

Tags : Congress ,protests ,government ,
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்