×

மின்பாதை விரிவாக்கப்பணிக்காக பெரியகுளம் பகுதியில் 3 நாள் மின்தடை

பெரியகுளம், டிச. 22: மின்பாதையில் விரிவாக்கப்பணிக்காக பெரியகுளம் பகுதியில் 3 நாள் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் கோட்டப்பராமரிப்பில் உள்ள பெரியகுளம் துணைமின்நிலையத்தில் 22 கேவி காலேஜ் மின்பாதையில் (பொம்மிநாயக்கன்பட்டி) விரிவாக்கப்பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று முதல் (டிச.22, 23 மற்றும் 24ம் தேதி) 3 நாட்களுக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மேல்மங்கலம், தேவதானப்பட்டி, காமாட்சிபுரம், நல்லகருப்பன்படடி, சில்வார்பட்டி, தண்ணீர்பந்தல், வேல்நகர், அழகர்நாயக்கன்பட்டி, எண்டப்புளி புதுப்பட்டி, டி.வாடிப்பட்டி, கீழகாமக்காபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

Tags : area ,Periyakulam ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி