×

புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தமுமுக கோரிக்கை

கமுதி, டிச.22:  கமுதி சுந்தராபுரத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டுமென தமுமுக கோரிக்கை வைத்துள்ளது. கமுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக வாராந்திர நிர்வாகிகள் கூட்டம், நகர தலைவர் சாகுல்ஹமீது தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் இக்பால் முன்னிலை வகித்தார். பொருளாளர் முகம்மது இர்ஷாத் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் சுந்தராபுரத்தில் புதிய கிளை உருவாக்கி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். சுந்தராபுரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் அபாய நிலையில் உள்ளதால், அதனை அகற்றிவிட்டு, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். பேரூராட்சி பகுதியில் நாய்களின் தொல்லைகள் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெரிய பள்ளிவாசல் தெரு, வேப்பங்குளம் சம்சுராவுத்தர் தெரு, அல்லாபிச்சை தெரு போன்ற தெருக்களில் வாறுகால்கள் சீரமைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை கோரிக்கை மனுவாக பேரூராட்சி அலுவலகத்தில், அளிக்கப்படும் என கூறினர். நகர துணைத் தலைவர் சேக் முகமது நன்றி கூறினார்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...