×

குண்டும் குழியுமான சாலையில் திண்டாடும் வாகன ஓட்டிகள்

ஆர்.எஸ்.மங்கலம், டிச.22:  ஆர்.எஸ்.மங்கலம் அருகே குண்டும் குழியுமாய் சேதமடைந்த சாலையால் வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலையை சரி செய்து தர பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலத்தில் பரமக்குடி நெடுஞ்சாலையில் பணிதிவயல் விலக்கு ரோட்டில் இருந்து நயினார்கோவில் செல்லும் சாலையில் விலக்கு ரோட்டில் இருந்து அரை கி.மீ தூரத்திற்கு ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில்தான் நயினார்கோவில் வழியாக பரமக்குடி செல்லும் பேருந்து வழித்தடம் இது போக, தினசரி ஏராளமான டூவீலர்களும், பஸ் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. பணிதிவயல் நகரம், கீரம்பாண்டி, மூவலூர் உள்ளிட்ட கிராம மக்கள் அதிகம் பயன்படுத்தும் இச்சாலை கடந்த சில வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட போது பழுதாகி உள்ள சுமார் அரை கி.மீ தூரத்தை மட்டும் அப்படியே விட்டுள்ளனர். தற்போது சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளதால், இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக பழுதான சாலையை சரி செய்து தர வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி