×

மதுரையில் நிதி நிறுவனத்தில் ரூ.92 ஆயிரம் மோசடி ஊழியர் உள்பட 4 பேர் கைது

மதுரை, டிச. 22:  மதுரையில் நிதி நிறுவனத்தில் காசோலைகளை திருடி, ரூ.92 ஆயிரம் மோசடி செய்ததாக, அந்நிறுவன ஊழியர் ஒருவர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை செல்லூர் கீழ வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (31). இவர் கொன்னவாயன் சாலையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடமிருந்த கையெழுத்துடன் கூடிய ஒரு காசோலை காணாமல் போய்விட்டது. விசாரணையில், இதே நிறுவனத்தில் பணிபுரியும் அருள்முருகன் என்பவர், இந்த காசோலையை திருடி, மணிவண்ணன் என்பவரின் உதவியுடன், இந்தியன் வங்கியிலிருந்து, ரூ.92 ஆயிரத்தை எடுத்திருப்பது தெரியவந்தது. மேலும் இந்த மோசடிக்கு,  சிலம்பரசன், கார்த்திக் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து சத்யராஜ் கொடுத்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்முருகன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

Tags : persons ,Madurai ,institution ,
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான...