×

மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

திண்டுக்கல், டிச. 22: தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள பணிகளை அவுட்சோர்சிங் முறையில் தனியார் மயமாக்குவதை கண்டித்து, திண்டுக்கல் மின்வாரிய அலுவலகத்தில் 36 தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கூட்டமைப்பு மாநில துணை செயலாளர் செய்யது இப்ராகிம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சுப்பிரமணியன், மாநில இணை செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநிலத் துணைத் தலைவர் மீனாட்சி சுந்தரம், மாநில துணை பொது செயலாளர் அபுதாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் மின்சார துறையில் பணிபுரியும் வயர்மேன், உதவியாளர், வணிக ஆய்வாளர், மின்பாதை ஆய்வாளர் என பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags : Power plant staff ,
× RELATED வேலைக்கு வர ரயில் வசதி; மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை