திருச்சி, டிச.22: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வாட்ஸ்அப் செயலி மூலம் மனுக்கள் பெறப்படுகிறது. அதன்படி நேற்று நடந்த குறைதீர் நாள் முகாமில் 538 மனுக்கள் வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் சிவராசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.