×

ஏராளமானோர் திரண்டனர் வெவ்வேறு சம்பவங்களில் 2 குழந்தைகள் பரிதாப சாவு திருவாரூரில் சோகம்

திருவாரூர், டிச.22: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள புர சத்தாங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் மகேந்திரன் (30). இவரது ஒன்றரை வயது ஆண் குழந்தை தஷ்வந்த். நேற்று முன்தினம் வீட்டு வாசலில் மகேந்திரன் தனது பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது குழந்தை தஷ்வந்த் அந்த பைக்கின் மீது ஏறியதில் பைக் கீழே சாய்ந்தது. இதில் பைக்கின் அடியில் குழந்தை சிக்கி கொள்ளவே நெஞ்சில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை இறந்தது. இது தொடர்பாக கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திருவாரூர் தாலுகா கூடூர் கிராமத்தில் வசித்து வருபவர் சத்தியபாலன் (28). இவரது இரண்டரை வயது மகள் தர்ஷா. கடந்த 17ம் தேதி வீட்டின் உள்ளே கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தை திடீரென தூக்க கலக்கத்தில் கீழே விழுந்த நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குழந்தை இறந்தது. இது தொடர்பாக திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : death ,children ,Thiruvarur ,incidents ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...