தஞ்சை, டிச. 22: இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி கூறினார். தஞ்சையில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி கூறியதாவது: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களால் தமிழகம் போன்ற மாநிலங்களில் உள்ள சிறு குறு விவசாயிகள் பாதிக்கும் சூழல் உள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை மறுக்கப்படுகிறது. தனியார் மண்டிகளின் ஆதிக்கத்தால் விவசாயிகள் விளை பொருள்களை அவர்களிடம் தான் விற்க வேண்டும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மீள வேண்டும் என்றால் அந்த சட்டங்களை மறுபரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும்.