×

விராலிமலை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

விராலிமலை, டிச.22: விராலிமலை அருகே அனுமதியின்றி மனல் எடுத்த டிப்பர் லாரியை விராலிமலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விராலிமலை அருகே உள்ள ராஜகிரி கூத்தாண்டம்மன் கோயில் அருகில் உள்ள கோரையாறு பகுதியில் மணல் எடுத்து கடத்தப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விராலிமலை காவல் நிலைய ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் போலிசார் நேற்று அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கோரையாற்றில் டிப்பர் மினிலாரியில் மணல் அள்ளிகொண்டிருந்தனர். அப்போது போலீஸ் வாகனத்தை கண்ட மினி லாரி ஓட்டுனர் தப்பி ஓடி விட்டார்.

Tags : Viralimalai ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா