×

புதுக்கோட்டையில் இன்று நடக்க இருந்த இளைஞர் பெருமன்ற சாலைமறியல் ஒத்திவைப்பு

புதுக்கோட்டை, டிச.22: புதுக் கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் வேப்பங்குடி ஊராட்சியில் மோசமான நிலையில் உள்ள சாலையை செப்ப னிட கோரியும், அரசு மதுபான கடையை உடனடியாக அகற்ற கோரியும், வறுமைகோட்டின் கீழ் வாழும் பயனாளிகள் தகுதி உள்ளவர்களை இணைக்க கோரியும், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் இன்று திருவரங்குளத்தில் மறியல் போராட்டம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை கோட்டாட்சியர் தலைமையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், ஒன்றிய செயலாளர் சொர்ணகுமார், துணை செயலாளர் லெனின்ராஜ், முருகன், இளைஞர் பெருமன்றத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ராசேந்திரன், கிளை நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், விஜய் வசந்த், மருதுபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்ற சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் கோட்டாட்சியர் அனைத்து கோரிக்கைகளை குறிப்பிட்ட நாட்களில் செய்து தருவதாக வாக்குறுதி அளித்ததன்பேரில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டது.

Tags : Youth Parliament ,Pudukkottai ,
× RELATED வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு