×

தா.பழூர் அருகே எலி பேஸ்ட் தின்று இளம்பெண் தற்கொலை

தா.பழூர், டிச.22: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தேவமங்கலம் காந்தி நகரை சேர்ந்த அந்தோணிசாமி என்பவரது மகள் ஷகிலா (19). ஏற்கெனவே தாயை இழந்த ஷகிலா தந்தையையும் இழந்ததால் திருப்பூரில் வேலை செய்து வந்தார். தற்போது அவரது அக்கா ஷாலினியுடன் தேவமங்கலத்தில் வசித்து வந்தார். ஷகிலா கண்புருவத்தில் கட்டி இருந்ததாகவும் அதன் வலி தாங்க முடியாமல் கடந்த 19ம் தேதி அன்று எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, செல்லும் வழியிலேயே ஷகிலா இறந்து விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தா.பழூர் ஷகிலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Teen ,suicide ,Dhaka ,
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது