×

சீரமைக்க வலியுறுத்தல் அரவக்குறிச்சி பகுதியில் மழையால் முருங்கைக்காய் விளைச்சல் குறைவு

அரவக்குறிச்சி . டிச. 22: அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் மழையின் காரணமாக பூக்கள் உதிர்ந்து அறுவடை மிகவும் குறைந்துள்ளது. இதனால் சந்தைக்கு முருங்கை வரத்து குறைந்துள்ளது. ஒரு காய் ரூ.5க்கு விற்பனையாகிறது. அரவக்குறிச்சி பகுதியில் ஈசநத்தம், ஆலமரத்துப்பட்டி, சாந்தப்பாடி, கோவிலூர், நாகம் பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்படுகின்றது. இப்பகுதி முருங்கை காய்திரட்சியாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் தமிழகத்து மாவட்டத்தில் மட்டுமல்லாமல், கேரளா, மற்றும் பெங்களூரு, பூனே, மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அரவக்குறிச்சி பகுதி முருங்கை காய்க்கு தனி மவுசு உள்ளது.

ஆகையால் மலைக்கோவிலூர், ஈசாத்தம், இந்திரா நகர், பள்ளபட்டி பழனி சாலை உள்ளிட்ட மொத்த கொள்முதல் மையங்களிலிருந்து, முருங்கை மொத்த வியாபாரிகள் வாங்கி மற்ற இடங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக தொடர் மழையின் காரணமாக அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை விளைச்சல் குறைந்து அறுவடை மிகவும் குறைந்துள்ளது. இதனால் மொத்த விற்பனை சந்தைக்கு முருங்கைகாய் வரத்து மிகவும் குறைந்துள்ளது. வரும் முருங்கை காய்க்கவும், பழுப்பு நிறத்தில் உள்ளதால் விலை போவதில்லை. தற்போது முருங்கை கிலோ ரூ.20 முதல் ரூ. 30 வரை விற்பனையாகின்றது. சில்லரை விற்பனையில் ஒரு முருங்கைகாய் ரூ.5 க்கு விற்பனையாகின்றது.

Tags : rainfall ,area ,Aravakurichi ,
× RELATED வாக்குப்பதிவு முடிந்து விட்டதால்...