×

தண்டராம்பட்டு அருகே 1,000 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்

தண்டராம்பட்டு, டிச.21: தண்டராம்பட்டு அடுத்த இளையாங்கண்ணி ஊராட்சி தட்டரணை பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக எஸ்பி அரவிந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் டிஎஸ்பி அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, எஸ்ஐ முத்துசாமி மற்றும் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,000 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், இதில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Thandarampatti ,
× RELATED தண்டராம்பட்டு அருகே பரபரப்பு சவுண்டு சர்வீஸ் குடோனில் பயங்கர தீ