×

முத்தையாபுரம் பகுதியில் மது விற்ற 2பேர் கைது

ஸ்பிக்நகர், டிச. 21: முத்தையாபுரம் எஸ்ஐ ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் முத்தையாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முத்தையாபுரம் பல்க் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்வரை பிடித்து விசாரித்ததில் அவர் சவேரியார்புரத்தை சேர்ந்த பொன்ராஜ் மகன் ராமராஜ்(32) என்பதும் விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை கைதுசெய்த போலீசார் அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல ஸ்பிக்நகர் அருகே விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்தத தூத்துக்குடி மேலசண்முகபுரம் பெருமாள் தெருவை சேர்ந்த வேல்சாமி மகன் பொன்சிங் என்பவரையும் கைதுசெய்து அவரிடமிருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்