×

பெரியதாழையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஊர்வசி அமிர்தராஜ் வழங்கினார்

சாத்தான்குளம், டிச.21: பெரியதாழையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம், 600 பேருக்கு வேட்டி, சேலைகளை ஊர்வசி அமிர்தராஜ் வழங்கினார். சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட மீனவர் பிரிவு தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மாநில இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம், 600 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி பேசினார். சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி, மாவட்ட துணைத்தலைவர் சங்கர், பெரியதாழை பஞ்.தலைவர் பிரதீபா முன்னிலை வகித்தனர். நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் வேணுகோபால் வரவேற்றார்.

இதில் மாவட்ட துணைத்தலைவர் தேவசகாயம், வட்டார தலைவர்கள் கிழக்கு பிச்சிவிளை சுதாகர், வடக்கு பார்த்தசாரதி, மேற்கு சக்திவேல்முருகன், பொருளாளர் பாஸ்கர், ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனம், தெற்கு மாவட்ட விசிக இளைஞரணி தலைவர் விடுதலை செழியன், ஒன்றிய கவுன்சிலர்கள் குருசாமி, சுபாகிறிஸ்டி பொன்மலர்சுரேஷ், அஜித், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், துணைத்தலைவர் இசைசங்கர், முன்னாள் மாநகரத் தலைவர் எடிசன், முன்னாள் மாவட்ட ஓபிசி தலைவர் ஜெயக்கொடி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரபோஸ், பட்டுராம்குமார், ஆழ்வார்திருநகரி கிழக்கு வட்டார தலைவர் பாலசிங், ஆத்தூர் நகர தலைவர் சின்னத்துரை, பெரியதலை கிராம கமிட்டி துணைத்தலைவர் எல்ஜி யூஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர்மெதனிஸ், அதிபன், குமரேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கிராம காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஜான் நன்றி கூறினார்.

Tags : Urvasi Amirtaraj ,
× RELATED மாங்கொட்டாபுரம் பஞ்சாயத்து...