×

ராசிபுரத்தில் பாஜவினர் பிரசாரம்

ராசிபுரம், டிச.21: மத்திய அரசின் வேளாண் சட்டங்களால், விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என பாஜவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.ராசிபுரம், ஆண்டகளூர்கேட், ஏடிசி டெப்போ, சிங்களாந்தபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று பாஜ மாநில விவசாய பிரிவு நிர்வாகி சேகர், அப்பகுதி விவசாயிகளிடையே பேசியதாவது: விவசாயிகளின் நலனுக்காக மோடி அரசு வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. கட்சி சார்பற்ற விவசாய சங்கங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும், இந்த திட்டங்களை வரவேற்கிறார்கள்.

வேளாண் சட்டங்களைப்பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாமல், எதிர்க்கட்சிகள்  பொய் பிரசாரம் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், மாவட்ட நிர்வாகி சேதுராமன், நகர நிர்வாகி மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : BJP ,campaign ,Rasipuram ,
× RELATED பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...