×

பாலம் கட்டுமான பணி துவக்கம்

கிருஷ்ணகிரி, டிச.21: பர்கூர் அருகே சிந்தகம்பள்ளி ஓதிகுப்பம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்போதும், மழை காலங்களிளிலும் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுப்பது வாடிக்கையாக உள்ளது. இதனால், கெம்பிநாயனப்பள்ளியில் இருந்து இருளர் காலனி குடியிருப்புக்கு செல்வதில்  கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.  எனவே, இந்த கால்வாயின் குறுக்கே பாலம் கட்ட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்று, தமிழக அரசு மாநில நிதிக்குழு திட்டத்தின் மூலம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, பர்கூர் ராஜேந்திரன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து பாலம் கட்டுமான பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடேசன், வரட்டனப்பள்ளி கூட்டுறவு சங்க தலைவரும், மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளருமான வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Commencement ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...