×

நன்னிலம் அருகே வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து புதுமண தம்பதி படுகாயம்

திருவாரூர், டிச. 21: கனமழை காரணமாக நன்னிலம் அருகே கூரை வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் புதுமண தம்பதியினர் படுகாயமடைந்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வண்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (69). இவரின் மனைவி அமுதா (61). இருவரும் கூரை வீட்டில் வசிக் கின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக வீட்டின் சுவர்கள் நீர் கோர்த்து சேதமடைந்த நிலையில் இருந்து வந்தது. இவரது வீட்டிற்கு அடுத்த உள்ள மற்றொரு கூரை வீட்டில் இவரின் மகன் செல்வம் தனது மனைவி மாலினியுடன் வசித்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது.

இந்நிலையில், நேற்று அதிகாலை கோபால் வீட்டின் சுவர் அருகில் உள்ள இவரது மகன் செல்வம் வசிக்கும் மற்றொரு கூரை வீட்டின் சுவற்றோடு சேர்ந்து இடிந்து விழுந்தது. இதில்அந்த வீட்டில் படுத்திருந்த செல்வம் மற்றும் மனைவி மாலினி ஆகியோர் படுகாயமடைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் ஓடிவந்து செல்வம், மாலினி ஆகியோரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் தாசில்தார் லட்சுமி பிரபா மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இடிந்து விழுந்த சுவற்றை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் விரைவில் அரசின் சார்பில் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

Tags : Newlyweds ,Nannilam ,
× RELATED அனல் பறக்கும் பிரசாரத்தில்...