×

திருமக்கோட்டையில் நடந்தது நீடாமங்கலத்திலிருந்து தர்மபுரிக்கு 1000 டன் நெல் மூட்டைகள் அரவைக்கு ரயிலில் அனுப்பிவைப்பு

நீடாமங்கலம்,டிச.21: நீடாமங்கலத்திலிருந்து தர்மபுரிக்கு 1000டன் நெல்மூட்டைகள் அரவைக்கு ரயில்வேகன்களில் அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், கூத்தாநல்லூர், திருத்துறைபூண்டி உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்த நெல்களை தனியார் முகவர்களிடமிருந்து அரசு பெற்று அரவை செய்த அரிசிகளை மத்திய சேமிப்பு கிடங்கு பாமனி மற்றும் வட்ட கிடங்குகளில் சேமித்து வைத்த அரிசி மூட்டைகள் மற்றும் தாலுகா பகுதிகளில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்களில் சேமித்து வைத்துள்ள நெல்மூட்டைகள் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்கும்,அரிசி மூட்டைகள் பொது விநி யோக திட்டத்திற்கும் நீடாமங்கலத்திலிருந்து பல்வேறு ரயில் பெட்டிகளில் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் நேற்று திறந்த வெளி சேமிப்பு மையங்கள் எடையர் நத்தம்,மூவாநல்லூர்,தெற்கு நத்தம் உள்ளிட்ட திறந்தவெளி சேமிப்பு மையங்களிலிருந்து 159 லாரிகளில் 1000 டன் சன்னரக நெல் மூட்டைகளை நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து 42 ரயில் பெட்டி(வேகன்)களில் தர்மபுரி மாவட்டத்திற்கு அரவைக்காக தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Tags : Thirumakkottai ,Needamangalam ,Dharmapuri ,
× RELATED நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில்...