×

பொன்னமராவதி அருகே வீட்டில் புகுந்து மூதாட்டியிடம் 11 பவுன் செயின் பறிப்பு

பொன்னமராவதி, டிச.21: பொன்னமராவதி அருகே வீட்டில் புகுந்து கத்தியை காட்டி மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 11 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள காயம்புஞ்சையைச் சேர்ந்தவர் காசி மனைவி பஞ்சவர்ணம்(65).இவர் நேற்று தனது வீட்டில் பாத்ரூம் சென்றுள்ளார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத நபர் கத்தியுடன் ஒழிந்திருந்து பஞ்சவர்ணம் கழுத்தில் கிடந்த 11 பவுன் தாலிச்செயினை பறித்துச் சென்றுள்ளனர். வீட்டில் ஆள் இல்லாமல் இருப்பது, வயதானவர்கள் உள்ளது போன்றவைகளை அறிந்து திருடும் கும்பலை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pound chain ,Ponnamaravathi ,house ,
× RELATED பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் கோலாட்டம் அடித்து வழிபாடு