×

கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை மும்முரம் டெல்லி போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

கரூர், டிச. 21: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு இறந்த விவசாயிகளுக்கு கம்யூனிட்ஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் திருவூருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கடந்த இரண்டு வாரத்துக்கும் மேலாக டெல்லியில் முகாமிட்டு விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், சிலர் இறந்துள்ளனர். இந்நிலையில், நேற்று தமிழகம் முழுதும் இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மனோகரா கார்னர் மற்றும் லைட்ஹவுஸ் கார்னர் போன்ற பகுதிகளில், இறந்த விவசாயிகளின் திருவுருவ படங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி, சாமானிய மக்கள் கட்சி, மக்கள் அதிகாரம், அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு போன்ற பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...