×

புலியூர் வெங்கடாபுரம் பகுதியில் கழிவுநீர் தேங்குவதை கண்டித்து மக்கள் நூதன போராட்டம்

கரூர், டிச. 21: கரூர் மாவட்டம் புலியூர் அருகே பல்வேறு பகுதிகளின் கழிவுகள் வெங்கடாபுரம் பகுதிக்கு வருவதை கண்டித்து இந்த பகுதியினர் நேற்று சோறாக்கும் போராட்டம் நடத்தினர். கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட வெங்கடாபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியை சுற்றிலும் உள்ள சில பகுதிகளின் கழிவுகள் அனைத்தும் இந்த பகுதியில் வந்து தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த பிரச்னை குறித்து இந்த பகுதியினர் பேரூராட்சி நிர்வாகத்திடமும் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர், இதனை கண்டித்து சோறாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், புலியூர் வெங்கடாபுரம் பகுதியில் நிலவி வரும் இந்த பிரச்னையை பார்வையிட்டு தேவையான தீர்வுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : protest ,area ,Puliyur Venkatapuram ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்..!!