×

ராஜபாளையத்தில் நூல் வெளியீட்டு விழா

ராஜபாளையம், டிச. 21:  ராஜபாளையத்தில் சேக்கிழார் மன்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அகில பாரத சன்யாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதானந்த மகராஜ் தலைமை வகித்தார். சேக்கிழார் மன்ற தலைவர் பேராசிரியர் பூமிநாதன் எழுதிய ‘விட்டு விடுதலையாகி விடு’ என்ற நூலை தூத்துக்குடி சைவநெறி இதழாசிரியர் காந்தி வெளியிட ராஜபாளையம் வட்டாட்சியர் சரஸ்வதி கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். முன்னதாக மன்ற செயலாளர் கல்யாண வெங்கட்ராமன் வரவேற்றார். மன்றத் தலைவர் பூமிநாதன் நூல் குறித்து பேசினார். துணைத் தலைவர் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.

Tags : Book launch ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...