சாத்தூர், டிச.21: சாத்தூர் அருகே நத்தத்துபட்டியை சேர்ந்தவர் ஏசுராஜா(24). அதே கிராமத்தை சேர்ந்த வாழவந்தான்(23). இவர்கள் இருவரும் குடிபோதையில் சண்டையிட்டுள்ளனர். இதை ஏசுராஜாவின் தந்தை முத்து(61) விலக்கி விட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாழவந்தான், கட்டையால் முத்துவை தாக்கியதில் அவரின் மண்டை உடைந்தது. அத்துடன் வாழவந்தான் கொலைமிரட்டல் விடுத்ததுள்ளார். படுகாயம் அடைந்த முத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குபதிவு செய்த இருக்கன்குடி காவல்நிலைய போலீசார் வாழவந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.