×

நினைவு தினம் அனுசரிப்பு

தேனி, டிச. 21: தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் மறைந்த நாராயணசாமி நாயுடுவின் 36வது நினைவு தினம் நேற்று தேனி மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தேனி மாவட்ட விவசாய சங்க தலைவர் எம்.பாண்டியன் தலைமையில் நினைவு தின நிகழ்ச்சி நடந்தது.இதேபோல, அல்லிநகரத்தில் ராஜகுரு பாண்டியன், லட்சுமிபுரத்தில் பரசுராம், கண்ணன், பெரியகுளத்தில் வெற்றிவேல், பாண்டியராஜ், பரமசிவம், கொடுவிலார்பட்டியில் சீனிராஜ்,
கோவிந்தநகரத்தில் நவநீதன், சின்னையா, கோபாலபுரத்தில் நாட்டாண்மை சீனிவாசன் உள்பட ஏராளமானோர் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதையொட்டி நாராயணசாமி நாயுடு உருவப்படத்திற்கு விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : Memorial Day ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...