×

கேஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி

ராமேஸ்வரம், டிச.21:மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து சமையல் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நேற்று ராமேஸ்வரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமேஸ்வரம் நகராட்சி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா பொருளாளர் சுமதி தலைமை வகித்தார். தங்கச்சிமடம் வார்டு உறுப்பினர் முத்துமாரி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது பங்கேற்ற பெண்கள் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, விறகு அடுப்பில் தீ எரித்தும் மத்திய, மாநில அரசுகளை கணடித்தும் கோஷமிட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்கம் தாலுகா தலைவர் வெங்கடேஷ்வரி, செயலாளர் ஆரோக்கிய நிர்மலா உட்பட பலர் பேசினர். ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு