×

பணிமாறுதல் கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும் பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மதுரை, டிச.21: முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் சந்திரன், பொதுச்செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தனர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 17(பி) பணியிட நீக்கம், பணிமாறுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்ைகளையும் திரும்பப்பெற வேண்டும். முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும். முதுநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணிமாறுதல் கலந்தாய்வினை உடனடியாக நடத்த வேண்டும். முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில நிர்வாகி சிவக்குமார், அஜீஸ்குமார், உக்கிரபாண்டியன் உட்பட 30 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.    

Tags : teachers ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...