×

ஆபரேசன் செய்த பெண் சாவு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

திருமங்கலம், டிச.21:  அறுவை சிகிச்சை செய்த இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக திருமங்கலத்தில் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலம் அருகேயுள்ள மேலஉரப்பனூர் பள்ளக்காபட்டியை சேர்ந்தவர் இன்பரசி(30). சத்துணவு ஊழியர். கணவர் ராமு இறந்துவிட்டார். ஒரே மகன் ஜீவபாலனுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வயிற்று வலிக்காக திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் எதிரேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு இன்பரசி தனது தாயுடன் வந்துள்ளார். இவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.


இதனை தொடர்ந்து இன்பரசிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் வலி அதிகமாகி துடிக்கவே மருத்துவமனை நிர்வாகம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த இன்பரசி நேற்று காலையில் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த இன்பரசியின் உறவினர்கள், கிராமமக்கள் நேற்று மதியம் திரண்டு திருமங்கலம் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த டிஎஸ்பி விநோதினி மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தார். தொடர்ந்து டிஎஸ்பி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Tags : Relatives ,hospital ,death ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...