×

உப்பாறு அணைக்கு நீர் வழங்கக்கோரி விவசாயிகள் 13ம் நாளாக போராட்டம்

தாராபுரம், டிச. 21: தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் 13வது நாளாக நேற்று  போராட்டத்தில் ஈடுபட்டனர். உப்பாறு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உப்பாறு அணைக்கு நீர் வழங்க கோரியும், பிஏபி பிரதான கால்வாயில் ராட்சத குழாய்களை பதித்து பல லட்சம் லிட்டர் தண்ணீரை கடத்தி விற்பனை செய்வதை கண்டித்தும், தண்ணீர் திருட்டுக்கு உடந்தையாக இருக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும் தாராபுரத்தில் பாசன விவசாயிகளும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரும் இணைந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

13வது நாளான நேற்று தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கொங்கு கலாசார மையத்தின் கல்வெட்டு ஆய்வாளர் உடுமலை ரவி, வழக்கறிஞர் துரைசாமி ஆகியோர் பேசினர். விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் தண்ணீர் கேட்டு கோரிக்கை கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவகுமார் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Tags : dam ,Upparu ,
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...