×

சம்பள நிலுவை கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்

விருதுநகர்,டிச.18:  சம்பள நிலுவைத்தொகையை வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஊழியர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக ஊழியர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் ஜெயக்குமார், இளமாறன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.  

பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை  சம்பளம் மற்றும் போனஸ் வழங்க வேண்டும். ஆட்குறைப்பு செய்வதை தவிர்க்க வேண்டுமென்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் தெரிவித்தனர்.

Tags : BSNL ,hunger strike ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...