×

மாடு மேய்த்தவர் மீது தாக்குதல்: 4 வனஊழியர்கள் மீது வழக்கு

வருசநாடு, டிச. 18: கண்டமனூர் அருகே, வனப்பகுதியில் மாடு மேய்த்தவரை தாக்கிய 4 வன ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (40). இவர், கடந்த 16ம் தேதி கண்டமனூர் அருகே உள்ள சாரக்காடு வனப்பகுதியில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ரோந்து வந்த கண்டமனூர் வனத்துறையினர், இளையராஜாவை மாடுகளை மேய்க்க கூடாது என எச்சரித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், இளையராஜாவை வனஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இளையராஜா அளித்த புகாரின் பேரில் கண்டமனூர் போலீசார் வன ஊழியர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வன ஊழியர் செல்வம் அளித்த புகாரின் பேரில் இளையராஜா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags : cowherd ,
× RELATED திருச்சி நாகமங்கலத்தில் ஜல்லிக்கட்டு...