×

காரைக்குடி பகுதியில் பட்டா வழங்குவதில் முறைகேடு

காரைக்குடி, டிச. 18: காரைக்குடியில் வட்டாசியர் அலுவலகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா blsfS நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி லதா தலைமை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் 133 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 50 மதிப்பில் முதியோர் ஓய்வூதியம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ கேஆர்.ராமசாமி பேசுகையில், காரைக்குடி பகுதியில் பட்டா வழங்குவதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

ஒப்பந்தகாரருக்கு கொடுக்கப்பட்ட காலம் முடிந்தும் பணி முடியவில்லை. காரைக்குடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. சிவகங்கை வந்த முதல்வர் போதிய மக்கள்தொகை இல்லை கூறியுள்ளார். இந்நகராட்சியுடன் சங்கராபுரம் ஊராட்சியை இணைத்தால் போதிய மக்கள் தொகை வரும். அதேபோல் சட்ட கல்லூரி, கலைக்கல்லூரி கேட்டும் நடவடிக்கை இல்லை’ என்றார்.

Tags : Patta ,Karaikudi ,area ,
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி