×

அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச.18: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி டெல்லியில் 17 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் திருவாரூர் விஜயபுரம் பள்ளிவாசல் தெருவில் இயங்கி வரும் தனியார் செல்போன் நிறுவன அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல், மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் இடும்பையன், நகர செயலாளர் பாலசுப்ரமணியன், சிஐடியு மாவட்ட செயலாளர் முருகையன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சலாவுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kamaraj ,protest ,Communist Party ,Marxist ,
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்