×

கார்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

கும்பகோணம், டிச. 18: கார்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோயிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. கும்பகோணத்தில் பாணபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் மகாமகம் திருவிழாவுடன் தொடர்புடைய சிறப்புகள் பெற்றது. அம்பாள் சோமகமலாம்பிகை சமேத பாணபுரீஸ்வரர் சுவாமி பரிவார சன்னதிகளுடன் அருள்பாலிக்கிறார். மாணிக்கவாசக பெருமான் பதிகங்கள் பாடிய சிறப்புடையது. சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இந்த கோயிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி 1,008 சங்குகளில் புனிதநீர் ஊற்றி வைத்து பூஜை செய்து சுவாமி, அம்பாளுக்கு திருமஞ்சனம் நடந்தது.இதில் விக்னேஸ்வர பூஜை, ருத்ர ஹோமம் செய்யப்பட்டு 1,008 வெண்சங்குகளில் புனிதநீர் ஊற்றி வைத்து அலங்கரித்திருந்தனர். இதையடுத்து கடங்கள் புறப்பாடு நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Sankabhishekam ,Kumbakonam ,Panapuriswarar Temple ,Karthika ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...