×

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் முற்றுகை முயற்சி

கும்பகோணம், டிச. 18: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டத்துக்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்து கும்பகோணம் அடுத்த ஆடுதுறையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை முற்றுகையிடுவதற்காக மாவட்ட தலைவர் ரஹ்மத் அலி தலைமையில் கடைத்தெருவில் இருந்து பேரணியாக புறப்பட்டு சென்றனர. அப்போது அவர்களை தடுப்புகளை வைத்து போலீசார் மறித்தனர். இதனால் தடுப்புகளை தள்ளி விட்டு செல்ல போராட்டக்காரர்கள் முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அந்த இடத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் மமகவை சேர்ந்த 41 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Aaduthurai Paddy Research Station ,
× RELATED ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில்...