×

கலெக்டர் அழைப்பு எலி பேஸ்ட் தின்று சிகிச்சையில் இருந்த மாணவி பரிதாப சாவு

புதுக்கோட்டை, டிச.18: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தென் கொத்தக்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பாரதி பிரியா(21). அங்குள்ள ஒரு கல்லூரியில் லேப் டெக்னீசியன் 2ம் ஆண்டு படித்து வந்தார். பெற்றோரிடம் புதிதாக செல்போன் வாங்கிதரும்படி கேட்டு வந்தார். ஆனால் பெற்றோர் வாங்கி தரவில்லை. இதனால் மனமுடைந்த மாணவி கடந்த 11ம் தேதி எலி பேஸ்ட்டை தின்று மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாணவி இறந்தார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Collector ,student ,death ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...