×

வேளாங்கண்ணி அருகே பைக் மீது லாரி மோதி கொத்தனார் பலி

நாகை, டிச.18: வேளாங்கண்ணி அருகே லாரி மோதி கொத்தனார் பலியானார். வேளாங்கண்ணி அருகே கருங்கண்ணி மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் சகாயராஜ் (40). அதே பகுதியை சேர்ந்தவர் சந்தாணசாமி ( 50). இரண்டு பேரும் கொத்தனார். சம்பவத்தன்று இரண்டு பேரும் வீட்டில் இருந்து பைக்கில் கிழக்கு கடற்கரை சாலையில் நாகை நோக்கி வந்தனர். அப்போது கருவேலங்கடை அருகே சென்றபோது நாகையிலிருந்து வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர். காயமடைந்த இரண்டு பேரும் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துகல்லூரி மருத்துவவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சகாயராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Lorry ,Velankanni ,
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது