×

உழவர் உற்பத்தியாளருக்கு ரூ.10 லட்சம் கடனுதவி: கலெக்டர் தகவல்

மதுரை, டிச.18: விவசாயிகள் ஒன்றிணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை கலெக்டர் அன்பழகன் கூறும்போது, ‘‘மூலதன பங்கை அதிகரிக்கும் வகையில், அரசின் சார்பில் ரூ.10 லட்சம் வரை இடைக்கால மூலதன கடன் கொடுக்கப்படும். இந்த தொகையை கொண்டு நிறுவனங்கள் தங்கள் விளைபொருட்களை லாபகரமாக சந்தைப்படுத்தலாம். 5 ஆண்டுகள் கழித்து கடனை செலுத்தினால் போதும். ஆண்டுதோறும் 4 சதவீத வட்டி வசூலிக்கப்படும்.

வங்கிகளை அணுகும்போது ரூ.ஒரு கோடி வரை கடன் பெற 50 சதவீத உத்தரவாதத்தை அரசே ஏற்கிறது. வட்டியும் 8 சதவீதம் குறைக்கப்படும். சலுகையுடன் கூடிய கடன் வழங்கப்படும். கடன் பெற்று தொழிலை விரிவுபடுத்த நினைக்கும் நிறுவனங்கள், மதுரை வேளாண்மை வணிகம் சார்ந்த துணை இயக்குநரை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 0452-2530091 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு